Skip to main content

The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie

குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு -  எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும்.

குற்றம் கடிதல்  திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம்.  ஆனால், ஆனால்  RTI file  பண்ணலாம் ..

Power of RTI


RTI  என்றால் என்ன ?

RTI (right to information act)   -   RTI  தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம் 10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm  to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது, கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன் (https://www.facebook.com/BalasubramaniE?fref=ts) அவர்கள்  விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம் எழுதவும் பயிற்சி அளித்தார்.


RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான் செல்ல நேர்ந்தது. காலதாமதமாக சென்றதால் முதல் 5 நிமிடங்கள் வக்கீல் துறையில் இருப்பவர்களுக்கு இந்த முகாம் என்று நினைத்தேன்.பிறகு அய்யா பாலசுப்ரமணியன் அவர்கள் எல்லாருக்காகவும் தான், இதை எல்லாரும் தெரிந்து கொள்ளவேண்டும்என்பதை விரிவாக விளக்கினார்கள். பிறகு சுகாதார துறைக்கு விண்ணப்பம் எழுத பயிற்சி அளித்தார்..

கிளை நூலககங்களின் நிலை பற்றி தெரிவதற்கு RTI  மூலம் தெரிந்துகொள்ளலாமா ? எனது கேள்விக்கு எவ்வாறு விண்ணபிக்க வேண்டும் என்று விளக்கமளித்தார்.

ஏன் RTI ? எதற்கு RTI ? முதலில் RTI என்றால் என்ன ?

லஞ்சம் தந்து சில தேவைகளை பூர்த்தி செய்வோம். எதற்கு நமக்கான உரிமைகளுக்கு ஏன் ?

எனக்கான உனக்கான நமக்கான உரிமைகள், தகவல்கள், சலுகைகளை உரிய வகையில் பெற விண்ணப்பம் செய்ய வேண்டும், மனு எழுத வேண்டும்  யாருக்கு, எவ்வாறு என்பதை அய்யா அவர்கள் விரிவாக எங்களக்கு அன்று சொல்லி கொடுத்தார்கள்..

எடுத்துக்காட்டு : 7ம், 8ம்  வகுப்பில் எழுதுவோமே  எங்கள் தெருவிற்கு குடிநீர் வேண்டி, டெங்கு காய்ச்சலை வரமால் தடுக்க, அதன் முகவரியில்  எழுதி இருப்போம் அல்லவா, பெறுநர் மாவட்ட ஆட்சியாளர்அதே  மாதிரி தான்...

பள்ளியில்  படிக்கும் போது தான் நம்ம ஏன் யாருக்கு இந்த கடிதம்  எழுதுகிறோம், இந்த முகவரியில் இந்த கடிதத்தை அனுப்பி வைத்தால் என்ன ஆகும் என்று அப்பொழுது யோசிக்கவில்லை .

இச்சட்டத்தின் மூலம் யார் யார் எதை, எவ்வாறு, கேட்கலாம் என்பதை அய்யா அவர்கள் விண்ணப்பிக்கும் முறையோடு  சொல்லி கொடுத்தார்கள்...

உரிமைகள்

வேலைவாய்பு (employement) ஆபீஸ் இல்  பதிவு  செய்திருப்போம், வருடங்கள் சென்று  இருக்கும்,    ஆனால்  ஒரு தொலைபேசி அழைப்பு கூட  இதுவரைக்கும் வரவில்லை   ஏன் ? கேட்கலாம்,    எனக்காக  என்ன  செய்தீர்கள் ? நான் உங்களிடம் பதிவு செய்ததற்கு எந்தெந்த  அலுவலகத்திற்கு  என்னை  refer  செய்திருக்கீறீர்கள்  அதற்கான  டாகுமென்ட் இன் நகல் வேண்டும்  என  கேட்கலாம்.

தகவல்கள்

டெங்கு காய்ச்சலுக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது ( தேதி முதல்  தேதி வரை )
டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களின் விவரம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  இறந்தவர்களுக்கான நிவாரண நிதி அரசாங்கம் அளித்த விவரம்
இந்த தகல்வல்களை RTI  மனுவின் மூலமாக பெற்றுகொள்ளலாம்

சலுகைகள்

கல்வி உதவித்தொகை
கல்விக்கடன்
விவசாயக்கூலி
ஊனமுற்றவர்களுக்கு உதவிப்பணம் 
Etc ......

பொதுவாக RTI   பற்றி பதிவு போடுவதால்  இந்த பதிவு எல்லாருக்கும் புரியுமா நான் சொல்லவந்ததை சரியாக புரியும் படியாக சொல்லுவேனா என்ற சிந்தனை இருந்து கொண்டே இருந்தது..

ஒரு முகாம் தான் கலந்து கொண்டேன், அதுவும் முழுவதுமாக அல்லஇதை வைத்து என்னவென்று எழுதுவது மேலும்  அடுத்தடுத்த பயிற்சியில் கலந்து கொண்டுவேண்டுமானால் எழுதலாம் என்றே சிந்தனை இருந்தது, எழுதுவதற்கு முன் யோசித்து சிறப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு அதற்கான புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பித்ததும் facebook  இல் RTI  book reading பதிவு  போட்டேன். நண்பர் ஒருவர் அந்த பதிவில் RTI பற்றி  கேட்டு இருந்தார் அடுத்த பதிவில் சொல்கிறேன் என்றேன்.  எப்படி எழுதுவதுஎழுதினாலும் அது நானே கேள்வி கேட்டு நானே விடை சொல்லி இதை நான் ஏன் உங்களக்கு சொல்கிறேன் என்ற ஒரு கேள்வி உங்களக்குள் வரும்.   இதை எழுதும் முன் நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம்  சொல்லி இந்த மாதிரிலாம் இருக்கு என்றதும், அவர்கள் இதை நோக்கும் விதத்தில்  கதை கேட்கும் போக்கு இருப்பதை  கவனிக்க முடிந்தது

குற்றம் கடிதல் திரைப்படம் -  RTI File பண்ணனும் தோழா, தமிழ் நாட்டில் எத்தனை பள்ளியில் இன்னும் டீச்சர் பிள்ளைங்கள அடிக்கிறாங்கஅதனால பசங்க எத்தனை பேரு பாதிக்கபடறாங்க. அரசாங்கம் இதுக்காக என்ன நடவடிக்கை எடுக்கிறாங்க, எத்தனை குழந்தைகளுக்கு  நிவாரணம் கொடுத்திருக்காங்க ?

ஆனால் RTI பற்றி எனக்கு தெரிந்த சிலவற்றை வைத்து மட்டும் எழுதும் போது இதை பற்றி ஒரே கோணத்தில் பார்க்கும்படியா இருக்குமே என்று நினைத்தேன். குற்றம் கடிதல் திரைப்படம் பார்த்த பின் இருந்த சிறு தயக்கமும் பிறகு இல்லை.

குற்றம் கடிதல் திரைப்படம் எல்லாரும் பார்க்க வேண்டிய திரைப்படம்... IMDB Rating  (9/10)  

மேலும் RTI பற்றி தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்




Comments

  1. surukamana thelivana pathivu sakthi

    ReplyDelete
  2. very nice blog .we also provide information about RTI and how to file RTI .
    RTI Online , File RTI,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்புக்குரியவள் என் அத்தனை ப்ரியத்துக்குரியவள்

இவள் அழகி. சத்தமில்லாமல் வருவாள் தண்ணீர் குடித்து விட்டு சென்று விடுவாள். அப்போது யாராவது கோபித்துக் கொண்டாலும், சத்தம் போட்டாலும், அடிக்க வந்தாலும் எதுக்கும் பதில் பேசாமல் அமைதியாக நம் கண்களைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். விழிகளைப் பார்த்த வண்ணம் இருப்பாள். எவ்வளவு கோபத்தோடு அனுகினாலும் அவளிடம் இருக்கும் ஜென் நிலையை நம்மிடையே செலுத்தி விட்டு செல்வாள். ஒரு நாள் அவசரமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல கெளம்பி கொண்டிருந்த சமயம் வழி விட மறுத்தாள். என் கண்களை நோக்கிய வண்ணம் இருந்ததால், என்ன வேண்டும் சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று பிஸ்கட் கொடுத்தேன், பிறகு வினவினேன். அதுக்கும் அதே பாவனை. வழி விட மறுத்ததால் கோவப்பட்டேன் அதுக்கும் அதே பாவனை. பிறகு என்னை மீறி சிரித்து விட்டேன். அடுத்த நாள் ஏன் இப்படிச் செய்தாய் என்னாயிற்று நேற்று என, நானும் பக்கத்து வீட்டு தோழி அர்ச்சினியும் இவளை பிளாக் செய்து பேச ஆரம்பித்தோம். தலை தெறிக்க ஓடிவிட்டாள். :)  இவளை கோபத்துடன் பார்ப்பது அரிது. கடந்த வருடம் கருவுற்றிருந்த நிலையில் எப்போதும் சற்று அச்சத்துடன் காணப்பட்டாள். பிள்ளைகள் பெற்றதும் எங்கே பிள்ளைகளை ஏதாவ

வெறுக்கதகும் நகை கடை விளம்பரங்கள் - Disgusting Jewelry Shop Advertisements

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .  விளம்பரம் 1   "மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"   விளம்பரம் 2  "பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"   விளம்பரம் 3  "மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் சென்று விடுவார். உட