Skip to main content

தினம் ஒரு கதை - நம் விதி - பாவ்லோ கொய்லோ - Daily Story - Destiny - Paulo Coelho

பெருந்தன்மைக்கும், நேர்மைக்கும் பெயர் போன சாமுராய் ஒருவர், ஜென் துறவியிடம் ஆலோசனை கேற்பதற்காக அவரை சந்திக்க சென்றார். 

துறவி தனது தியானத்தில் இருந்து விழித்ததும், 

சாமுராய் கேட்டார்,

நான் ஏன் என்னை மிகவும் தாழ்ந்தவனாக உணர்கிறேன்? நான் பல முறை மரணத்தை எதிர்கொண்டவன், பலவீனமானவர்களையும் பாதுகாத்துள்ளேன்.

ஆயினும் கூட, நீங்கள் தியானிப்பதைக் கண்டும், என் வாழ்க்கைக்கு முற்றிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று உணர்கிறேன்.

- காத்திருங்கள். இன்று என்னைப் பார்க்க வரும் அனைவருடன் , எங்கள் சந்திப்பு முடிந்ததும், நான் தங்களுக்கு பதிலளிப்பேன்.

சாமுராய் நாள் முழுவதும் கோவில் தோட்டங்களில் உட்கார்ந்தும், மக்கள் ஆலோசனையைத் தேடி உள்ளேயும் வெளியேயும் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தார். அவர்கள் அனைவரையும் துறவி  பொறுமையுடனும், முகத்தில் ஒளிரும் அதே புன்னகையுடனும் ஒரே விதமாக அணுகியதை சாமுராய் கண்டார்.

இரவுப்பொழுதில், மக்கள் எல்லோரும் சென்றபோது, ​​சாமுராய் துறவியிடம் கோரினார்:
- இப்போது தாங்கள் எனக்கு கற்பிக்க இயலுமா?

துறவி, அவரை உள்ளே அழைத்து தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார். வானத்தில் முழு நிலவு பிரகாசித்து கொண்டிருந்தது, சுற்றுப்புறம் ஆழ்ந்த அமைதியுடன் சலனமற்று இருந்தது.

நீங்கள் நிலவை பார்த்தீர்களா, எவ்வளவு அழகாக இருக்கிறதல்லவா? இந்நிலவு முழு பிரபஞ்சத்தையும்  கடக்கும், நாளை சூரியன் மீண்டும் உதிக்கும்.

"ஆனால் சூரிய ஒளி மிகவும் பிரகாசமானது, மேலும் சூரிய ஒளியால்  நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் விவரங்களைக் காட்ட முடியும்: மரங்கள், மலைகள், மேகங்கள்.

"நான் இவ்விருவர் பற்றியும் பல ஆண்டுகளாக சிந்தித்துள்ளேன், நிலவு சொல்லி நான் கேள்விப்பட்டதே இல்லை, நான் ஏன் சூரியனைப் போல பிரகாசிக்கவில்லை? என :  ஒருவேளை நான் தாழ்ந்தவன் என்பதாலோ? -  நிச்சயமாக இல்லை ! என சாமுராய் பதிலளித்தார். 

நிலவும், சூரியனும் வெவ்வேறானவை, ஒவ்வொன்றும் அதற்கே உரிய சொந்த அழகைக் கொண்டுள்ளன. இரண்டையும் ஒன்றோடொன்று நீங்கள் ஒப்பிட முடியாது.

- எனவே தங்களுக்கு பதில் தெரியும்.
 நாம் இருவரும் இரண்டு வெவ்வேறு நபர்கள், மேலும் இவ்வுலகை ஒரு மேம்பட்ட இடமாக மாற்ற அவரவர் நம்பிக்கையின் வழியில்  போராடிக்கொண்டிருக்கிறோம், போராடிக்கொண்டே இருப்போம் இவ்வுலகம் மேம்பட்ட இடமாகும் வரை.



Tamil Translation: Sakthi

Comments

Popular posts from this blog

The Power of RTI (Right to Information act) - இதுதான் தகவல் பெறும் உரிமைச்சட்டம் - Kutram Kadithal Movie

குற்றம் கடிதல் திரைப்படம் - நல்ல படம் பார்த்த நிறைவு -  எல்லாரும் பாருங்க உங்களுக்கு பிடிக்கும். குற்றம் கடிதல்  திரைப்படம் - அடித்த ஆசிரியை, மயங்கிய சிறுவன் - தோழா அந்த ஆசிரியை மேல் போட்ட கேஸ் வாபஸ் வாங்கிக்கலாம்.  ஆனால் , ஆனால்  RTI file  பண்ணலாம் .. RTI  என்றால் என்ன ? RTI (right to information act)   -   RTI  தகவல் பெறும் உரிமைச்சட்டம் சிறப்பு பயிற்சி முகாம் 10 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை அன்று 4 pm  to 7 pm சென்னை parrys கும்பத் காம்ப்ளெக்ஸ் இல் நடைபெற்றது , கட்டணம் ஏதும் இல்லை. நமக்கான உரிமையை எவ்வாறு எழுத்து வடிவம் மூலம் விண்ணப்பித்து அரசாங்கத்திடம் பெறவேண்டும் என்பதை அய்யா பாலசுப்ரமணியன் ( https://www.facebook.com/BalasubramaniE?fref=ts ) அவர்கள்  விரிவாக விளக்கியதோடு மட்டுமில்லாமல் விண்ணப்பம் எழுதவும் பயிற்சி அளித்தார். RTI சிறப்பு பயிற்சி முகாம் வரும் போது நோட்டுபுத்தகம், பேனா எடுத்துவரவும். என்று facebook பதிவில் சொல்லி இருந்தார்கள். சிறிது தாமதமாகிவிட்டது. 5pm மணி அளவில் தான்...

எண் 54 பேருந்தும், நானும் (MTC Bus Driver with my Conversation)

'54'  பாரிஸ் இல் இருந்து பூந்தமல்லி  செல்லும் பேருந்தில் வழக்கம் போல் அலுவலுகம் சென்று மாலை பணி முடிந்து மறுபடி 54  பேருந்தில் வரும் போது பேருந்தில் நடந்த உரையாடல், அனுபவம் ..... எப்பொழுதும் கண்ணாடி கதவு போட்ட பேருந்தில் காலை சென்ட்ரல் சிக்னலில் கதவு திறந்து கூட்டம் ஏற்றி பிறகு சிறிது நேரம்  ஸ்டாண்ட் போட்டு பிறகு தான் வண்டி எடுப்பார்கள்.. ஆனால் பணி முடிந்து மாலை அதே சென்ட்ரல் சிக்னலில் வண்டி நிற்கும் போதும், fort ஸ்டேஷனலிலும் பெரும்பாலோர் கதவு திறக்கும் படி கேட்பார்கள், திட்டி  தீர்ப்பார்கள் ஆனாலும் கதவு திறக்க மாட்டார்கள்..  சில சமயம் கதவு திறப்பார்கள்.. அந்த மாதிரி சமயங்களில் கடைசியாக இறங்கும் போது ஏன், எதற்கு கதவு திறக்கவில்லை என பணிவாக ஓட்டுனரிடம் கேட்டுருக்கிறேன்.. ஆமாம் காலை திறக்கிறோம் மாலை இனிமேல் செய்கிறோம் என்றும், உனக்கெதுக்கு இந்த தேவை இல்லாத பேச்சு  என்கிற பேச்சும் வாங்கியிருக்கிறேன்.. அனால் இன்று சந்தித்த அனுபவம் சற்றே வித்தியாசமானது.     ஓட்டுநர் அன்பும், நடத்துனர் ஆறுமுகமும் எங்களது உரையாடலும் .... உரையாடல் (அ...

வெறுக்கதகும் நகை கடை விளம்பரங்கள் - Disgusting Jewelry Shop Advertisements

சமிப காலமாக நகை கடை விளம்பரங்களை அதிகமாக பார்க்க நேரிடுகிறது, எல்லா சேனல்களிலும் நகை கடை விளம்பரங்கள் என்றாலே உங்கள் பெண்களுக்கு நகை வாங்கி விட்டீர்களா இல்லையா ? கல்யாணமே நடக்காது என்பது போல் தான் இருக்கிறது .  விளம்பரம் 1   "மாப்பிள்ளையே அப்படியே வெயிட் பண்ண சொல்லுங்க இதோ வந்துடறேன், அதான் நம்ப கடை இருக்கே அதான் அதே தான் அந்த நகை கடை இருக்கே என்று"   விளம்பரம் 2  "பெண், பெண்கள் என்றாலே டென்ஷன் ல என்று ஆரம்பித்து .பெண்கள் டென்ஷன் இல்லை அவர்களுக்கு நகை சேர்ப்பதில் தான் டென்ஷன் என்று சொல்லி கவலை படாதீங்க, கல்யாண வயதில் பெண்கள் இருக்கா கவலை வேண்டாம். அந்த நகை கடையில் வட்டி இல்லை அது இல்லை இது இல்லை என்று சொல்றாங்க"   விளம்பரம் 3  "மற்றுமொரு விளம்பரம் ஒன்றில் அப்பா அம்மா அவர்களின் மகள் கோவிலுக்கு செல்வார்கள், உடனே மனைவி கணவரிடம் கூறுவார்கள் நம்ப பெண் யாரோ ஒரு பையன் கூட ஓடி போக போறா என்று, கணவர் கண்டு கொள்ளமாட்டார், மகள் கோவிலில் இருந்து வெளியே வந்தவுடன் காதலன் அழைப்பார் அந்த பெண் காதலனை முறைத்த படி பார்த்து அவர் தந்தையுடன் ...