கன்னிமரா நூலகத்தில் எப்போதும் கதை புத்தகம் தான் எடுப்பேன் ஒரு மாறுதலுக்கு அன்று யாரோ படித்து வைத்த புத்தகத்தை எதர்ச்சியாக எடுத்து சென்றேன் "மீட்டாத வீணை - பாலகுமாரன், இனிது இனிது காதல் இனிது - பாலகுமாரன்" வியந்து போனதும் பிரமித்து போனதும் சந்தோஷ பட்டதும் கண்ணீர் சிந்தியதும் ரசித்ததும் ரசித்த எழுத்தை கற்பனை செய்ததும் இதை தவிர பிடித்திருகிறது என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்ட நேரம் நான் புத்தகம் முடித்த தருணம்... இனி இது போல் தருணம் கிடைக்குமா என்று நினைத்து பாலகுமாரன் ஐயா வினுடைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் ஒவ்வொரு புத்தகம் படித்தததும் அதே தருணம் தான்... மிகவும் மகிச்சியாய் இருக்கிறது...
பெருந்தன்மைக்கும், நேர்மைக்கும் பெயர் போன சாமுராய் ஒருவர், ஜென் துறவியிடம் ஆலோசனை கேற்பதற்காக அவரை சந்திக்க சென்றார். துறவி தனது தியானத்தில் இருந்து விழித்ததும், சாமுராய் கேட்டார், நான் ஏன் என்னை மிகவும் தாழ்ந்தவனாக உணர்கிறேன்? நான் பல முறை மரணத்தை எதிர்கொண்டவன், பலவீனமானவர்களையும் பாதுகாத்துள்ளேன். ஆயினும் கூட, நீங்கள் தியானிப்பதைக் கண்டும், என் வாழ்க்கைக்கு முற்றிலும் எந்த முக்கியத்துவமும் இல்லை என்று உணர்கிறேன். - காத்திருங்கள். இன்று என்னைப் பார்க்க வரும் அனைவருடன் , எங்கள் சந்திப்பு முடிந்ததும், நான் தங்களுக்கு பதிலளிப்பேன். சாமுராய் நாள் முழுவதும் கோவில் தோட்டங்களில் உட்கார்ந்தும், மக்கள் ஆலோசனையைத் தேடி உள்ளேயும் வெளியேயும் செல்வதைப் பார்த்த வண்ணம் இருந்தார். அவர்கள் அனைவரையும் துறவி பொறுமையுடனும், முகத்தில் ஒளிரும் அதே புன்னகையுடனும் ஒரே விதமாக அணுகியதை சாமுராய் கண்டார். இரவுப்பொழுதில், மக்கள் எல்லோரும் சென்றபோது, சாமுராய் துறவியிடம் கோரினார்: - இப்போது தாங்கள் எனக்கு கற்பிக்க இயலுமா? துறவி, அவரை உள்ளே அழைத்து தனது இடத்திற்கு அழைத்துச் சென்றார். வானத்தில் முழ...
Comments
Post a Comment